Saturday, December 18, 2010

பூச்சரம்

பூச்சரம்
“ஆன்மீக அரும்புகளினாலான அழகு மாலை” எனும் தலைப்பிலான வலைப்பூ (blog) ஆரம்பித்து இன்று (18.12.2010) ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.
ஒவ்வொரு கட்டுரையும் அரும்பு போல அமைந்து, அவையனைத்தையும் கோர்த்தால் வரும், வாசம் மிக்க மலர் மாலை போல, இக்கட்டுரைகள் அனைத்தும் இறைவனுக்கு ஆன்மீக மாலையாக அமையும் வண்ணம், இறைவனுக்கு அர்ப்பணிக்கும் உணர்வோடு எழுதப்படுகின்றது.
இறைவனின் துணைகொண்டு,
அமரரான என் தந்தையின் வழிநின்று,
அன்பர்களின் பலரின் வழிகாட்டுதலில்,
அடியேன் அறிந்த ஆன்மீக விஷயங்களை அனைவருக்கும் அறிவிக்கும் எண்ணத்தில் கட்டுரைகளை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.
(கதம்பம் எனும் பதிவைக் காணவும்)
வலைப்பூ (blog) ஆரம்பப்பிதற்கு முன் பல வருடங்களாக, ஆன்மீகக் கட்டுரைகளை பல பத்திரிகைகளுக்கு எழுதி வந்தேன்.
அவற்றை வலையேற்ற தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தபோது, ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்களிடம் பேசநேர்ந்தது.
அச்சமயம், வியதீபாத தரிசனம் எனும் கட்டுரையை அவரின் blog-ல் பதிவிடக் கேட்டுக்கொண்டேன்.
எவ்வித தயக்கமும் இன்றி உடனடியாக அக்கட்டுரையை அவரின் blog-ல் பதிவிட்டார். அது தான் எனக்கு முதல் தொடக்கமாக இருந்தது.
அதன்பின், தனியாகவே ஒரு வலைப்பூ ஆரம்பிக்க ஸ்ரீமதி கீதா சாம்பசிவம் அவர்கள் தக்க வழிகாட்டினார்கள்.
வலைப்பூ ஆரம்பித்தாகிவிட்டது. அடியேன் எழுதியிருந்த பல கட்டுரைகளை ஒவ்வொன்றாக இணையத்தில் எழுதலாம் என்று நினைத்திருந்தேன்.
ஆனால், இதுவரை அவற்றில் சிலவற்றையே பதிவிட்டிருக்கின்றேன்.
நண்பர்களின் பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஒவ்வொரு மாதமும் நிகழும் முக்கியமான ஆன்மீக நிகழ்வுகள் சம்பந்தமாகவும், தமிழ் இலக்கியம் சார்ந்தும், அடியேன் ரசித்த விஷயங்களையும் எழுத ஆரம்பித்தேன்.
ஆன்மீக சம்பந்தமான நண்பர்கள் பலர் கிடைத்தார்கள்.
அவர்களின் கேள்விகள், ஆலோசனைகள், மேலும் பல விஷயங்களைத் தேடச் செய்தது.
ஆகவே அவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.
வலைப்பூவிற்கு விஜயம் செய்த அத்துணை பேருக்கும் அனேக நன்றிகள்.
வலைப்பூவிலிருந்து சில தேர்ந்தெடுத்தக் கட்டுரைகளை, மதிப்பு மிகுந்த “ஞான ஒளி” (ஆன்மீக மாத இதழ் - தபோவனம், ஞானானந்த மிஷன் வெளியீடு) எனும் அற்புதமான புத்தகத்தில் வெளியிடுக்கொண்டிருக்ன்றார்கள்.
அப்பத்திரிகையின் ஆசிரியர் என்.ஆர். ரங்கநாதன் அவர்களுக்கு அனேக நன்றிகள்.
மாதம் மூன்று கட்டுரைகள் வீதம் எழுத நினைத்திருந்தேன்.
அதற்கு சற்றே ஒரு சிறு ஓய்வு கொடுக்க எண்ணியிருக்கின்றேன்.
சிறிது காலத்திற்குப் பிறகு தொடர்ந்து கட்டுரைகளை எழுதலாம் என்றிருக்கின்றேன்.
இது நாள் வரை எழுதிய கட்டுரைகளின் தலைப்புகளை தனித்தனி hyperlink ஆக கொடுத்திருக்கின்றேன்.
அத்தலைப்புகளின் மீது க்ளிக் செய்தால் அக்கட்டுரை விரியும்.
ஆன்லைனில் படிக்க இயலாதவர்கள், டவுன்லோடு செய்து ஆ•ப்லைனில் படிக்க வசதியாக அனைத்துக் கட்டுரைகளையும் (சற்றே திருத்தியமைத்து) ஒரே FILE ஆக PDF FORMAT –ல் இங்கே கொடுத்திருக்கின்றேன்.
இத்தொகுப்பை அச்சிடவும் ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கின்றேன்.
அன்பர்கள் வழக்கம்போல் தமது கருத்துக்களைக் கூறி, இந்த blog மேலும் சிறப்படைய வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கின்றேன்.
அனைவருக்கும் அனேக நன்றிகள்.
எனது முந்தையக் கட்டுரைகள் :
தைப் பூச நடனம், வியதீபாத தரிசனம், மார்கழி மஹோத்ஸவம், காசி யாத்திரை, ஆழ்வார்கள் அருளிய அமுதம், தியாகராஜர் ஆராதனை, சாளக்ராம வழிபாடு, கூடாரைவல்லி, நால்வர் காட்டிய நல்வழி, சங்கு சக்கரம் ஏந்திய நடராஜர், கவிக்கோ(ர்) காளமேகம், அதிசய அற்புத பாடல்கள், பாம்பு இயற்றிய பாடல், நடராஜ பத்து, திருப்பல்லாண்டு, மஹா சிவராத்திரி, வசந்த நவராத்திரி, நவாவரண பூஜை கதம்பம், கால கணிதம் (1,2,3,4 & 5), காளியின் அருள் பெற்ற காளிதாசன் (பகுதி - 1), ஆனித் திருமஞ்சனம் (2010) திருவள்ளுவர் கண்ட திருநடனம், ஆஷாட நவராத்திரி, அருள் நிறைத்த ஆஷாட நவராத்திரி ! ஆனந்தம் அளித்த ஆஷாட நவராத்திரி காளியின் அருள்பெற்ற காளிதாசன் (பகுதி - 2), விநாயகர் சதுர்த்தி - 2010 மஹா சங்கடஹர சதுர்த்தி, ஆடிப் பூரம் - வளையல் அலங்காரம், நமஸ்காரம் (இணக்கம் ஏற்படுத்தும் வணக்கம்), பிரம்ம பழம், விஷ்ணு பழம், சிவ பழம் !, சியமந்தக மணி, மஹா அன்னாபிஷேகம், நவராத்திரி, அன்னதானம் திருமுருகாற்றுப்படை * ஸ்கந்த சஷ்டி, கார்த்திகை தீபம், சங்காபிஷேகம்,
என்றும் அன்புடன் நி.த. நடராஜ தீக்ஷிதர் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை நெய்வேலி, ஸத்சங்கம் – மணித்வீபம் பூஜகர் செல் : 94434 79572 Mail : yanthralya@yahoo.co.in, yanthralaya@gmail.com

3 comments:

Geetha Sambasivam said...

ஒரு வருடம் பூர்த்தி ஆனதுக்கு வாழ்த்துகளும், ஆசிகளும். ஓய்வு வேண்டியதுதான். மாதம் ஒன்றாவது எழுதணும்னு வைச்சுக்குங்க. இப்போவே அப்படித் தான் இருக்குனு நினைக்கிறேன். நேரம் இருக்காதுனு தெரியும், என்றாலும் வேண்டுகோள்!

Geetha Sambasivam said...

to follow

k.sengottuvelan said...

Respected Sir

Really wonderful