Sunday, November 27, 2011

பாம்பு இயற்றிய பாடல் - பதவுரை

பாம்பு இயற்றிய பாடல் - பதவுரை

பாம்பு இயற்றிய பாடல் பற்றிய மேல் விபரங்களை இங்கே க்ளிக் செய்து காணலாம்.

மிகச் சிறப்பு வாய்ந்த இந்த ஸ்லோகத்தினை youtube videoவாக இங்கு க்ளிக் செய்து காணலாம்.

மஹா விஷ்ணுவை அனுதினமும் தாங்கும் ஆதிசேஷன் ஆயிரம் தலைகள் கொண்ட நாக அம்சம். மஹாவிஷ்ணு தான் கண்ட நடராஜர் ஆடிய ஆனந்த நடனத்தினை ஆதிசேஷனிடம் விளக்க, அதைத் தானும் காண அனுமதி வேண்ட, அதன்படியே விஷ்ணு வரம் அளிக்க, ஆதிசேஷன் சிவபெருமான் உறையும் கைலாயம் சென்று, ஆனந்தத் தாண்டவ தரிசனம் காண வரம் வேண்ட, தென்புறத்தில், தில்லை மரங்கள் சூழ்ந்த இடத்தில் ஆனந்த நடனம் நிகழ்த்த உள்ளோம் என்றும் அங்கு சென்று தவமிருப்பாயாக என்றும் அருளினார்.

அதன்படியே கைலாயத்திலிருந்து, ஆதிசேஷன் பதஞ்சலி எனும் நாக அம்ச உருக்கொண்டு, தில்லை மரங்கள் சூழ்ந்ததால் தில்லை எனும் பெயர் பெற்ற இடத்தில், புலிக்கால் முனிவராகிய வியாக்ரபாதருடன் தவம் செய்ய, தை மாதத்துப் பூச நக்ஷத்ரம் கூடிய தினத்தில்,

தில்லை ஸ்தலத்தில், அனைத்து ஜீவராசிகளும் ஆனந்த நடனத்தைக் காண கண்ணிமைக்காமல் காத்திருக்க, ஸகல தேவர்களும், அனைத்து கணங்களும் உடன் வர, இரு திருவடிகளில் ஒன்றை முயலகன் எனும் அரக்கன் மீது ஊன்றி நிறுத்தி, மறு திருவடியைத் தூக்குவதில் தொடங்குகிறது ஆனந்த நடனம்.

அண்ட சராசரமனைத்தையும் ஆட்டுவிக்கும் நாயகன் தன் ஆட்டத்தைத் துவங்குகிறார்.

காலில் சிலம்புகள் சிலம்புகின்றன. வலக்கையில் உள்ள டமருக ஒலி அண்டம் எங்கும் பரவுகின்றது. இடக்கயில் உள்ள அக்னி ஒளி பால் வெளியெங்கும் திரள்கிறது. முகத்தில் புன்னக பூக்கின்றது. தனது ஆட்டத்தில் மயக்கம் கொண்ட, அருகிலிருக்கும் சிவகாமியை சற்றே திரும்பிப் பார்க்கும் பார்வை. தலையில் கொக்கிறகும், ஊமத்தம் பூவும் அலங்கரிக்க, உதரபந்தம் விரிய, மார்பில் துலங்கும் ஆதிவராகக் கொம்பு அசைய, பனியால் நனைந்த தலையிலிருந்து கங்கையின் நீர்த்திவலைகள் திசையெங்கும் சிந்த, உடல் முழுவதும் பூசிய வெண்ணீறு சிதற ஆட்டம் நிகழ்கிறது.







இந்திரன் புல்லாங்குழல் இசைக்க, தும்புரு கீதம் ததும்ப, பிரம்மா தாளம் போட, சரஸ்வதி வீணை மீட்ட, சிவகணங்கள் எழுப்பும் ஜம் ஜம் எனும் தாள சப்தம் எழ, ரிஷிகளின் வேத கோஷம் விண்ணை முட்ட, நந்தி மத்தளம் வாசிக்க, விஷ்ணு முரசு கொட்ட, லக்ஷ்மி மதுரகீதம் பாட, பானுகம்பன், பாணாசுரன் எழுப்பும் சங்கு முழக்கத்தினாலும், ஓங்கார நாதத்தாலும் விண்ணதிர, ஆனந்தத்தில் விநாயகராட, மயிலோடு குமரனாட, தேவ கன்னியராட, நட்டமாடும் நம்பெருமானின் ஆட்டத்தினை, நெஞ்சம் உருக, ஆனந்தக் கண்னீர் சொரிய, பரவச நிலையை சிரிப்பார், களிப்பார் என்பதன்படி, முன்னம் செய்த தவப்பயனின் விளைவாக அனைவரும் திருநடனத்தினைக் காணப் பெறுகின்றனர்.

பதஞ்சலி, தான் கண்ட இத்திருக்கோலத்தை என்றும் எப்பொழுதும் அனைவரும் காணவேண்டும் என நினைந்து - நடராஜப் பெருமானை பதஞ்சலியாமல் தாண்டவம் தில்லையில் நிகழ்த்திக்கொண்டிருக்க வேண்டும் என - பெருநோக்கில் வரம் பெற்றார்.

ஆதிசேஷன் நாக அம்சம். அவருக்குக் (பாம்புக்கு) கொம்பும் காலும் கிடையாது. அது போலவே, அவர் எழுதிய ஒரு அற்புத ஸ்லோகத்திற்கு 'ஆ'காரம் எனும் கால் கொண்ட நெடில் எழுத்துக்களும், 'ஒ'காரம் எனும் கொம்பு கொண்ட எழுத்துக்களும் இல்லாததாய் அமைத்தார். அது 'ஸ்ரீ சரண ச்ருங்க ரஹித நடேச ஸ்தோத்ரம்' எனப் புகழ் வாய்ந்ததாய் அமைந்தது.

அதற்கான முழுமையான அர்த்தம் - நண்பர்கள் பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இதுவரை இணையத்தில் வெளிவராத விளக்கம் - இங்கு கொடுக்கப்படுகின்றது.

Photobucket

ஸ்ரீ சரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம்

(ஸ்ரீ பதஞ்சலி க்ருதம்)

1. ஸதஞ்சிதம் உஞ்சித நிகுஞ்சிதபதம் ஜலஜலம்சலித மஞ்ஜு கடகம்

பதஞ்சலி த்ருகஞ்சனம் அனஞ்சனம் அசஞ்சலபதம் ஜனன பஞ்சனகரம்|

கதம்பருசிம் அம்பரவஸம் பரமம் அம்புத கதம்பகவிடம்பககலம்

சிதம்புதிமணிம் புதஹ்ருதம்புஜ ரவிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

உரை :

ஸதஞ்சிதம் - ஸாது ஜனங்களால் பூஜிக்கப்படுபவர்

உதஞ்சித - மேலான பூஜைகளை உடையவர்

நிகுஞ்சித - அழகான வளைத்த

பதம் - கால்களை கொண்டவர்

ஜலஞ்ஜலித - ஜல் ஜல் எனும் ஓசை கொண்ட

மஞ்சுகடகம் - அழகான கால் அணிகளை அணிந்த

நடராஜப் பெருமான், பதஞ்சலியின் இமையில்லாத கண்களுக்கு (பாம்புகளுக்கு இமை கிடையாது) இணையற்ற காட்சி தந்தவரும், தோஷங்களை அகற்றுபவரும், நிரந்தரமானவரும், மோக்ஷத்தை அளிப்பவரும், அன்றலர்ந்த புஷ்பம் போன்று பொலிவானவரும், சிதம்பரத்தில் என்றும் வசிப்பவரும், மழையை சூல்கொண்ட கருமேகம் போன்ற கழுத்தை உடையவரும், ஞானக்கடலில் கிடைக்கும் ரத்னம் போன்றவரும், யோகிகள் தமது இருதயத்தில் என்றும் நிறுத்திவைக்கும் கோடி சூர்ய பிரகாச உத்தமராக விளங்கும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.


2. ஹரம் த்ரிபுர பஞ்சனம் அனந்தக்ருத கங்கணம் அகண்டதயம் அந்தரஹிதம்

விரிஞ்சிஸுர ஸம்ஹதி புரந்தர விசிந்திதபதம் தருணசந்த்ர மகுடம்|

பரம் பத விகண்டித யமம் பஸித மண்டிததனும் மதன வஞ்சன பரம்

சிரந்தனம் அமும் ப்ரணத ஸஞ்சித நிதிம் பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

அனைத்துப் பாவங்களையும் நீக்குபவரும், திரிபுர ஸம்ஹாரம் செய்தவரும், பாம்புகளை நகைகளாக அணிந்தவரும், கருணைக் கடலும், தேவர்களால் பூஜனை செய்யப்பட்டவரும், சந்திரனைத் தலையில் சூடியவரும், அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவரும், யமனைக் காலால் உதைத்தவரும், விபூதியை மேனி முழுதும் தரித்திருப்பவரும், மன்மதனை விஞ்சுபவரும் (ஸம்ஸார ஸாகரம் எனும் பாசங்களை அகற்றுபவரும்), மோக்ஷத்தை அருளுபவரும், பக்தர்களின் இதயத்தில் என்றும் வாசம் செய்பவரும், அள்ள அள்ளக் குறையாத புதையல் போல வரங்களை வாரி வழங்குபவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

3. அவந்தம் அகிலம் ஜகத் அபங்க குணதுங்கம் அமதம் த்ருதவிதும் ஸூரஸரித்

தரங்க நிகுரும்ப த்ருதி லம்பட ஜடம் சமன டம்பர ஹரம் பவஹரம்|

சிவம் தச திகந்தர விஜ்ரும்பித கரம் கரலஸன் ம்ருகசிசும் பசுபதிம்|

ஹரம் சசி தனஞ்ஜய பதங்கநயனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

அகிலம் அனைத்தையும் காப்பவரும், மேலான குணங்களைக் கொண்டவரும், கடுந்தவத்தால் மட்டுமே காட்சி தருபவரும், சந்திரனைத் தலையில் சூடியவரும், ஆர்ப்பரித்து வரும் கங்கை பிரவாகத்தைத் தன் ஒற்றைச் சடையில் தாங்கிவரும், யமனை வெல்லக் கூடியவரும், இவ்வுலக பாசங்களை அறுப்பவரும், மங்கல குணங்களோடு, பத்து திசைகளிலும் வியாபித்து இருப்பவரும், அலைபாயும் மனதை ஒத்த மானைத் தன் கையால் அடக்கியவரும், அனைத்து ஜீவராசிகளுக்கும் நாயகரும், பாபங்களை தீய்ப்பவரும், சூரியன், சந்திரன், அக்னி ஆகிய மூன்றையும் தன் கண்களாக உடையவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

4. அனந்த நவரத்ன விலஸத்கடக கிங்கிணி ஜலம்ஜலரவம்

முகுந்த விதி ஹஸ்தகத மத்தள லய த்வனி திமித்திமித நர்தன பதம்|

சகுந்தரத பர்ஹிரத நந்திமுக ப்ருங்கி ருஷி ஸங்க நிகடம்

ஸநந்த ஸநக ப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

தாண்டவம் ஆடும்போது பொன்னார் மேனியில் மேலுள்ள மாணிக்கம், முத்து, பவழம், வைரம் ஆகிய நவரத்ன நகைகள் ஜல ஜல ஜல என ஓசை எழுப்பக் காரணமானவரும், மஹாவிஷ்ணுவின் மத்தளத்தின் திமி திமி என்ற சப்தத்திற்கு உரியவகையில் நடமிடுபவரும், ப்ரம்மா, நந்தி, முருகர், விநாயகர் ஆகியோர் உடனிருக்க ஆடியருளுபவரும், ஸனந்தர், ஸனகர், ஸனத்குமாரர் எனும் பிரம்ம புத்திரர்களால் என்றும் நினைவில் கொள்ளப்படுபவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

5. அனந்த மஹிமம் த்ரிதச வந்த்ய சரணம் முனி ஹ்ருதந்தர வஸந்தம் அமலம்

கபந்த வியதிந்த்வனி கந்தவஹ வந்ஹி மகபந்து ரவிமஞ்ஜு வபுஷம்|

அனந்த விபவம் த்ரிஜகதந்த ரமணிம் த்ரிநயனம் த்ரிபுர கண்டன பரம்

ஸனந்த முனி வந்திதபதம் ஸகருணம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

எல்லைகளற்ற மகிமையுடையவரும், தேவர்கள் நமஸ்கரிக்கும் பாதக் கமலங்களை உடையவரும், முனிவர்களின் இதயத்தில் இடம்பெறுபவரும், பரிசுத்தமானவரும், ஜலம், ஆகாசம், சந்திரன், பூமி, காற்று, அக்னி, யாகம் ஆகியவற்றில் நீக்கமற நிறைந்திருப்பவரும், செல்வங்களை வழங்குபவரும், மூன்று உலகங்களுக்கும் நாயகரானவரும், திரிபுர ஸம்ஹாரத்தில் ஜயித்தவரும், ஸனந்தர் முதலான ரிஷிகளால் பாதபூஜை செய்யப்பட்டவரும், இரக்க குணம் உடையவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

6. அசிந்த்யம் அலிப்ருந்த ருசிபந்துர கல ஸ்புரதி குந்த நிகுரும்ப தவலம்

முகுந்த ஸுரப்ருந்த பலஹந்த்ரு க்ருதவந்தன லஸந்தம் அஹிகுண்டல தரம்|

அகம்பம் அனுகம்பித ரதிம் ஸுஜன மங்கல நிதிம் கஜஹரம் பசுபதிம்

தனஞ்ஜய நுதம் ப்ரணத ரஞ்ஜனபரம் பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

சிந்தனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு நிற்பவரும், வண்டுகளின் கூட்டத்தினைப் போன்ற கரு நிறக் கழுத்தையுடையவரும், மலர்ந்த முல்லைமலர் போன்ற வெள்ளை நிற மேனியை உடையவரும், விஷ்ணு, தேவர்கள், தேவேந்திரன் போன்றவர்கள் நமஸ்கரிப்பதால் பிரகாசமான முகம் கொண்டவரும், காதுகளில் பாம்புகளால் ஆன ஆபரணம் தரித்தவரும், நிலைத்த தன்மையுடையவரும், ரதி தேவியினால் பூஜிக்கப்பட்டவரும், ஸாதுக்களின் இருப்பிடத்தில் வசிப்பவரும், கஜாஸுரன் எனும் அசுரனின் தோலை உரித்து ஆடையாகத் தரித்தவரும், எல்லா உயிர்களுக்கும் நாயகரும், அர்ஜுனனால் துதிக்கப்பட்டவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

7. பரம் ஸுரவரம் புரஹரம் பசுபதிம் ஜனித தந்திமுக ஷண்முக ம் அமும்

ம்ருடம் கனக பிங்கல ஜடம் ஸனக பங்கஜ ரவிம் ஸுமனஸம் ஹிமருசிம்|

அஸங்க மனஸம் ஜலதி ஜன்ம கரலம் கபலயந்தம் அதுலம் குணநிதிம்

ஸநந்தவரதம் சமிதம் இந்து வதனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

எங்கும் பரவியிருப்பவரும், தேவர்களுள் சிறந்தவரும், திரிபுர ஸம்ஹாரம் செய்தவரும், ரிஷப வாகனம் எனும் விடையேறியவரும், விநாயகர், முருகர் முதலானோர்க்கு தந்தையானவரும், எப்பொழுதும் அருகில் இருப்பவரும், சுகத்தை அருள்பவரும், தங்கத்தினைப் போன்ற மின்னும் ஜடாமுடியை உடையவரும், ஸநக ரிஷிக்கு அருளியவரும், தாமரைப் பூவில் இருப்பவரும், சூர்ய பிரகாசம் உடையவரும், பனியைப் போன்ற வெண்மை நிறம் உடையவரும், ஆசையற்ற மனம் கொண்ட யோகியர் போன்றவரும், பாற்கடலில் தோன்றிய விஷத்தை அருந்தியவரும், கண்களின் பார்வைப் புலனைவிட மேலான ஒளித்தோற்றத்தை உடையவரும், அனைத்து மங்கல குணங்களை உடையவரும், ஸனந்த மகரிஷியின் வேண்டுதலைப் பூர்த்தி செய்தவரும், சாந்தமான குணத்தை உடையவரும், சந்திரனைப் போன்ற முகத்தை உடையவரும், உத்தம உத்தமராக விளங்குபவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

8. அஜம் க்ஷிதிரதம் புஜங்கபுங்கவ குணம் கனக ச்ருங்கி தனுஷம் கரலஸத்

குரங்க ப்ருது டங்க பரசும் ருசிர குங்கும ருசிம் டமருகஞ் ச தததம்|

முகுந்த விசிகம் நமதவந்த்ய பலதம் நிகம ப்ருந்த துரகம் நிருபமம்

ஸ சண்டிகம் அமும் ஜடிதி ஸம்ஹ்ருதபுரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

பிறவாதத் தன்மை கொண்டவரும் (யாருக்கும் பிறவாதவரும்), உலகத்தையே தனது தேராகக் கொண்டவரும், பாம்பினை வில்லின் நாணாகக் கொண்டவரும், கைகளில் ஒளிபொங்கும் மான், பெரிய உளி, கோடாரி இவைகளைத் தரித்தவரும், டமருகம் எனும் வாத்தியத்தை வாசிப்பவரும், மஹாவிஷ்ணுவை அம்பாகக் கொண்டவரும் (திரிபுர ஸம்ஹாரத்திற்காக), தம்மை வணங்குபவர்களுக்கு தன்னிகரற்ற பலன்களை அருளுபவரும், வேதங்களைக் தன்னுடைய தேருக்கு குதிரைகளாகக் கொண்டவரும், உவமை இல்லாதவரும், உமையுடன் என்றும் கூடியவரும், திரிபுரங்களை ஒரு நொடியில் ஸம்ஹரித்தவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.


9. அனங்க பரிபந்தினம் அஜம் க்ஷிதி துரந்தரம் அலங்கருணயந்த ம் அகிலம்

ஜ்வலந்தம் அனலம் தததம் அந்தகரிபும் ஸததம் இந்த்ரஸுர வந்திதபதம்|

உதஞ்சத் அரவிந்தகுல பந்து சதபிம்ப ருசி ஸம்ஹதி ஸுகந்தி வபுஷம்

பதஞ்ஜலி நுதம் ப்ரணவ பஞ்ஜரசுகம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||

மன்மதனை எரித்தவரும், பிறப்பில்லாதவரும், பூமியின் பாரத்தைத் தாங்குபவரும், அனைத்து ஜீவராசிகளையும் ரட்சிப்பவரும், தகிக்கும் அக்னியைக் கையில் ஏந்தியவரும், யமனுக்கு எதிரியாக இருப்பவரும், இந்திராதி தேவர்களால் நமஸ்கரிக்கப்படுபவரும், தாமரைப் பூக்களுக்கு அரசாகிய சூர்யனைப் போன்ற பிரகாசம் கொண்டவரும், நறுமணம் பொருந்திய தேகம் உடையவரும், பதஞ்சலியால் துதி செய்யப்பட்டவரும், ஓங்காரம் எனும் கூண்டினுள் உறையும் கிளியைப் போன்று - எங்கும் நிறைந்திருப்பவரும், சிதம்பரத்தின் ஞானசபையாகிய பொற்சபையில் அனவரதமும் தாண்டவமிடும் பரமேஸ்வரனை இதயத்தில் கொண்டு பிரார்த்திப்போம்.

10. இதி ஸ்தவம் அமும் புஜக புங்கவ க்ருதம் ப்ரதிதினம் படதி ய: க்ருதமுக:

ஸத: ப்ரபு பதத்விதய தர்சனபதம் ஸூ லலிதம் சரண ச்ருங்க ரஹிதம்|

ஸர:ப்ரபவ ஸம்பவ ஹரித்பதி ஹரி ப்ரமுக திவ்யநுத சங்கர பதம்

ஸ கச்சதி பரம் ந து ஜனுர்ஜலநிதிம் பரம துக்க ஜனகம் துரிததம்||

|| இதி ஸ்ரீபதஞ்சலி மஹர்ஷிக்ருத ஸ்ரீசரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்||

இவ்விதம் பதஞ்சலி மஹரிஷியால் இயற்றப்பட்டதும், பொற்சபையில் என்றும் நடமிடும் நாயகரின் பாதக் கமலங்களைப் பார்க்க வழிசெய்யும் ஸ்தோத்திரமானதும், அர்த்தம் மற்றும் பதங்களில் மிக எளிமையானதாகவும், கால் மற்றும் கொம்பு எழுத்துக்கள் இல்லாததும் ஆகிய இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்பவர்கள், பிரம்மா, விஷ்ணு இந்திராதி தேவர்கள் கூட அடையாத சிவ பதத்தையும், மோக்ஷத்தையும் அடைவார்கள்.

(நன்றி : ஸ்ரீ நந்திகேஸ்வர ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் - புத்தகம். கிடைக்குமிடம் : N.T. கணபதி தீக்ஷிதர், 17, கீழ சன்னதி, சிதம்பரம் - 1. போன் : 04144 - 225215)

- நி.த. நடராஜ தீக்ஷிதர்

- சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை

- செல் : 94434 79572

- mail : yanthralaya@yahoo.co.in &

yanthralaya@gmail.com

Friday, November 25, 2011

பிரதோஷ ஸ்தோத்ரம் & அஷ்டகம்

பிரதோஷ ஸ்தோத்ரம் & அஷ்டகம்

ஆதியும் அந்தமும் இல்லாத பெரும் பரம்பொருளாய் விளங்குபவர் சிவபெருமான். இவருக்குப் பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. சிவ வழிபாட்டினைத் தான் சைவம் என்று போற்றுகின்றோம்.

உலகத்தின் மிகப் பழமையான வழிபாடும் சிவ வழிபாடுதான். பண்டைய கால நாகரீகமாக விளங்கிய ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோ காலகட்டங்களில் சிவ வழிபாடு நடந்திருப்பது அகழ்வாராய்ச்சிகளில் மூலம் அறியமுடிகின்றது.

வேதங்கள் போற்றும் வேதநாயகனாக விளங்குபவர் சிவன். சுப மங்கலத்தை அருளுபவர்.

பரம்பொருளாகிய பரமேஸ்வரரின் மூச்சுக்காற்றிலிருந்தும், உடுக்கை ஒலியிலிருந்தும் சப்தங்கள் தோன்றி, வேத மந்திரங்களாகச் சிதறியிருந்ததை வியாச பகவான் ஒருங்கிணைத்து சதுர் (4) வேதங்களாகத் தொகுத்தார் (ருக், யஜுர், சாமம் & அதர்வணம்).

சிவபெருமானுக்கு பிறப்பில்லாத காரணத்தினால், சிற்ப சாஸ்திரங்களின்படி, சிவபெருமான் அம்சமுள்ள எந்தவொரு வடிவத்திற்கும் (நடராஜர், ஸோமாஸ்கந்தர்) கொப்பூழ் எனும் தொப்புள் அமைப்பதில்லை.

சிவன் எங்கும் நிறைந்திருப்பவர். திசைகள் அனைத்திலும் விளங்கும் திகம்பரர். ஸர்வ லோகங்களிலும் திகழும் சதாசிவர்.

மஹாவிஷ்ணு உலக மக்களைக் காக்க வேண்டி எடுப்பது அவதாரம். இந்த அவதாரத்தில் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு. (பகவான் கிருஷ்ணர் ஒரு வேடுவனின் அம்பினால் இறந்தார்).

சிவபெருமான் பக்தர்களைக் காக்க எடுப்பது அவஸரம். தக்க சமயம் வரும்போது தோன்றி, ரட்சித்துவிட்டு, மறைந்துவிடுதல்.

வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை விரைவில் வழங்குவதில் வல்லமை மிக்கவர் சிவபெருமான்.

சிவ வழிபாட்டில் பல்வேறு முறைகள் காணப்படுகின்றன. (காஷ்மீர சைவம், காபாலிக சைவம், சிவாகமம், சைவ சித்தாந்தம்)

சைவ வழிபாட்டு முறைகளில் மிகவும் பிரபலமாகவும், பலனளிக்கக் கூடியதாகவும், பக்தர்களின் வழிபாட்டில் மிக எளிமையாக விளங்குவதும் அமைவது பிரதோஷம்.

ஒரு மாதத்தில் இருமுறை வருவது பிரதோஷ பூஜை. ஒன்று வளர்பிறை திரயோதசி (அமாவாசையிலிருந்து 13ம் நாள்) மற்றொன்று தேய்பிறை திரயோதசி (பெளர்ணமியிலிருந்து 13ம் நாள்) தினம்.

ஒரு சமயம் வீதஹவ்யர் எனும் சிவபக்தர், சித்ரவதி எனும் தமது பத்தினியுடன், தமக்கு சிவாம்சமாக விளங்கக் கூடிய வகையில் மகவு வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, வேறு எந்த உணவும் எடுத்துக் கொள்ளாமல், சிறு சிறு கற்களையே உணவாக உண்டு கடும் தவம் செய்தார்.

கற்களை மட்டுமே உண்டதனால் அவர் சிலாதர் எனப் போற்றப்பட்டார். சிலாதர் பூஜை செய்த திருத்தலம், வட நாட்டுப் பாடல் பெற்றத் தலமாக விளங்குவதும், பன்னிரு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்றும் ஆகிய ஸ்ரீ சைலம் எனும் திருத்தலம். (இதுவே நந்தி தேவர் பிறந்த தலமும் ஆகும். நந்தி தேவர் தவம் செய்த தலம் நந்தியால்)

கற்களை மட்டுமே உண்டு தவமியற்றிய சிலாதருக்கு மனமிரங்கிய சிவன், அவர் முன் தோன்றி, தனது அம்சமாக ஒரு குழந்தை உனக்குக் கிடைப்பான் என திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.

சிலாதர் யாகம் செய்வதற்காக, நிலத்தை உழுத போது, மாணிக்க வைடூர்யங்கள் இழைத்த ஒரு பொற்பெட்டியில் ஒரு குழந்தை கிடைக்க, அக்குழந்தைக்கு வீரகன் எனப் பெயரிட்டு, பெருமகிழ்வுடன், கல்வி கலைகள் அனைத்தையும் கற்றுக்கொடுத்து வளர்த்து வந்தார்.

சில ஆண்டுகள் கழித்து, மித்ரன், வருணன் எனும் இரு தேவர்களும் வீதஹவ்யர் எனும் சிலாதர் முனிவரை பார்க்க வந்து, வீரகனுக்கு ஆயுள் சில காலம் தான் என்று கூறினர். இதைக் கேட்ட வீதஹவ்யர் மனமொடிந்து போக, வீரகன் தனது தந்தையைப் பார்த்து, நான் சிவபெருமான நோக்கி தவமிருந்து வரம் பெற்று வருகின்றேன் என கிளம்பினார்.

வீரகன், ஏழு கோடி முறை ஸ்ரீ ருத்ரம் மந்திரத்தை நாத்தழும்பேற ஜபிக்க, சிவபெருமான் வீரகனின் பக்திக்கு மனமிரங்கி, தனது கணங்களுக்கெல்லாம் தலைமை தாங்க, நந்தி எனப் பெயரிட்டு, தனக்கு வாகனமாகவும் ஏற்று, சாகாவரமும், என்றும் தன்னுடன் இருக்கவும், தனது வாயில் காப்பாளனாகவும் ஏற்று அருளினார்.

நந்தியையே தனது பிரதம சீடராக ஏற்று கலைகள் அனைத்தையும் கற்றுணர்த்தினார்.

(நந்தி = தலைமை. ஐந்து கரத்தனை ஆனை.... நந்தி மகன் தனை - என்று திருமூலர் விநாயகரைக் குறிப்பிடும்போது - நந்தி மகன் - என்பது, உலகமனைத்திற்கும் தலைமை தாங்கும் சிவபெருமானையே நந்தி எனக் குறிப்பிட்டு - அவர்தம் மகன் விநாயகர் என்கிறார்.)

சிவனிடமே பாடங்கள் கற்றமையால் சைலாதி எனப் புகழப்படும் நந்தி தேவர் ஞான ஆச்சார்யராக விளங்குபவர். விஷ்ணுவுக்கு சிவஞானம் பெற வழிகாட்டியவர். சிவ வழிபாட்டில் மிக முக்கியத்துவம் பெறுபவர். இன்றைக்கு இருக்கும் தருமபுரம், திருவாவடுதுறை போன்ற ஆதீனங்களுக்கு தலைமை குருவாக விளங்குபவர் நந்தி தேவர்தான்.

ஒரு சமயம், சாகாவரத்திற்கான அமிர்தம் பெறவேண்டி, அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை, மேரு என்னும் மலையையே மத்தாகக் கொண்டு, வாசுகி எனும் பாம்பை கயிறாகக் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும் அசுரர்கள் ஒரு புறமும் கடைய, வேகமும் அழுத்தமும் தாங்காத வாசுகி எனும் பாம்பு தனது விஷத்தன்மை கொண்ட பெருமூச்சினை விட, பாற்கடலில் இருந்து ஆலகால விஷம் தோன்றியது.

அது, அகிலம் அனைத்தையும் அழிக்கவல்லதாக அச்சுறுத்தலாக இருந்தது. இதைக் கண்ட தேவர்கள் தலைதெறிக்க ஓட, எங்கெல்லாம் அவர்கள் செல்கின்றார்களோ அங்கெல்லாம் ஆலகால விஷமும் துரத்தியது.

இறுதியில், தேவர்கள் ஸர்வலோக வியாபியான சிவபெருமான் உறையும் கைலாயம் சென்றனர். சிவனை தரிசிக்க வேண்டி கைலாயத்தின் இடப்புறம் வழியாக சென்றால், வலப்புறமாக விஷம் வந்து வாட்டியது. வலப்புறம் வழியாக சென்றால் இடப்புறமாக வந்து இடைமறித்தது.. (ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் - இந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. கீழே விபரம் உள்ளது.)

கைலாய நாதனை தேவர்கள் சரணடைய, சிவன் காட்சி தந்து அஞ்சேல் என்று அருளி, தனது மெய்க்காப்பாளனாகிய நந்தியை அழைத்து, அந்த விஷத்தை எடுத்து வரச் சொல்ல, அதன்படியே நந்தி எடுத்து வர, அந்த ஆலகால விஷத்தை, தனது வாயிலிட்டு விழுங்கும் போது, அந்த ஆலகால விஷத்தினால், தனது கணவருக்கு எந்த விதத்திலும் தீங்கு நேரக்கூடாது என்றெண்ணிய பார்வதி தேவி, அந்த விஷம் சிவனின் தொண்டைப் பகுதிக்கு வரும்போது, சிவனின் கண்டமாகிய கழுத்தைப் பிடிக்க, செம்பொன்னார் மேனியனாக விளங்கும் சிவனின் தொண்டையில் விஷம் கருநிறமாகத் தங்கியது.

அகிலம் ஆலகால விஷத்திலிருந்து தப்பியது. தேவர்கள் பயம் நீங்கினர். சிவபெருமானை நீலகண்டன் என போற்றினர்.

மறுபடியும் பாற்கடல் கடைய, அமிர்தம், லக்ஷ்மி தேவி, காமதேனு, உச்சைஸ்ரவம் எனும் குதிரை முதலான தோன்ற அனைவரும் மகிழ்வுற்றனர்.

(இந்தப் புராணத்திற்குள் அற்புதமான அறிவியல் தத்துவம் பொதிந்திருக்கின்றது. அதை விளக்க தனியொரு கட்டுரை எழுத வேண்டியிருக்கும். பிரபஞ்சம் தோன்றிய விதத்தை அறிவியல் விளக்கும் அம்சம் இந்தப் புராணத்தில் அடங்கியுள்ளது)

அச்சமயம், நந்தி தேவர் நாம் எடுத்து வந்த விஷம் அவ்வளவு வீரியம் வாய்ந்ததா என்று எண்ணி, உலகம் உய்ய ஒரு காரியத்தை, நான் செய்தேனே என்று செருக்குற்றார்.

அப்பொழுதுதான், அந்த விஷத்தின் வீரியம் நந்தி தேவரை வீழ்த்தியது.

மயக்கமுற்ற நந்தி தேவருக்கு, அகிலம் அனனத்திற்கும் படியளக்கும் அன்னபூரணியாக விளங்கும் பார்வதி தேவி, அரிசியும், வெல்லமும் கலந்த கலவையை நந்திக்கு மருந்தாகக் கொடுக்க, நந்தியின் தலைக்கு விஷத்தின் வீரியம் வராமலிருக்க சிவபெருமான் தனது பாதத்தை, நந்தியின் தலையில் இருத்தி, தாண்டத்தை நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே நிகழ்த்த பிரதோஷ தாண்டவம் நிகழ்ந்தேறியது.

மயக்கமும் விஷமும் நீங்கிய நந்தி, தனது செருக்கு நீங்கி, சிவபெருமானை வணங்கி வழிபட்டார்.

விண்ணோர்கள் அனனவரும் அந்த அற்புதத் தாண்டவத்தைக் கண்டு களித்தனர்.

பாற்கடல் கடையத் தொடங்கியது தசமி தினம் என்றும், ஏகாதசி தினம் முழுவதும் உறக்கமின்றி கடைந்தது என்றும், திரயோதசி தினத்தின், மாலை வேளையில் (4.30 pm - 6.00 pm) தான் நந்தியின் சிரசில் நடனமாடியதாகவும் சிவபுராணங்கள் பகர்கின்றன. இந்த நேரத்தை ரஜனி முக காலம் என்று போற்றுவார்கள்.

திரயோதசி திதியின் மாலை வேளையைத் தான் பிரதோஷ வேளையாகக் வழிபட்டு மகிழ்கின்றோம்.

அரிசி வெல்லக் கலவை ஒரு அற்புதமான மருந்து. வெல்லத்தில் இருக்கும் க்ளுக்கோஸும் (glucose), அரிசியில் உள்ள அமைலோஸ் (amylase) எனும் ஸ்டார்ச் வகையைச் சேர்ந்த உப்பும் சேர்வது - உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்க வல்லது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு சம்பந்தமான பிரச்னைகளுக்கு முதலுதவியாக ஜீனியும், உப்பும் கலந்த தண்ணீரைக் கொடுப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

அது போல, மாட்டிற்கு ஏதேனும் நோய் தாக்கியதாகத் தெரியவந்தால், முதலில் அரிசியும் வெல்லமும் கலந்த கலவையை உணவாகக் கொடுப்பார்கள்.

பிரதோஷ வேளையில் படைக்கப்படும் காப்பரிசி எனும் பிரஸாதம் - அரிசி மற்றும் வெல்லத்தினால் செய்யப்படுவது. அந்த பிரஸாதத்தை உட்கொண்டால், அது நம் உடலில் உள்ள விஷத்தன்மையை நீக்கவல்லது.

சூரியன் அஸ்தமித்து, சந்திரன் உதிக்கும் நேரமாக அந்தி மாலை நேரம் விஷத்தன்மை கொண்டது என்றும், அவ்வேளையில் தீபம் ஏற்றி, வழிபாடுகள் செய்ய, புனிதமான நேரம் என்றும் சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.

சாயங்கால வேளையில் சாப்பாடு கூடாது என்று பெரியோர்கள் கூறுவது இதன் அடிப்படையில் தான்.

மாலை வேளையில் தான், கர்வம் கொண்ட ஹிரண்யனை நரசிம்மர் வதம் செய்தார்.

பிரதோஷ வேளையில் சிவபெருமானை வணங்கினால் தலைக்கனம், கர்வம் போன்றவை நீங்கும் என்றும், ஆணவம், கண்மம், மாயை எனும் மும்மலங்களும் நீங்கி, சிவயோகம் கிடைக்கும் என்றும் சிவபுராணங்கள் வலியுறுத்துகின்றன.

நந்தி தேவருக்கு ஏற்பட்ட தலைக்கனத்தை (கர்வம்-செருக்கு) நீக்க அவரின் தலைமேல் தாண்டவமாடினார் சிவபெருமான்.

யமுனை நதியின் தலைவன் என கர்வம் கொண்ட காளிங்கன் எனும் நாகத்தின் தலை மீது தாண்டவமாடி தண்டித்தார் கிருஷ்ணன்.

நல்ல பக்தியும், நன்னெறியும், நல்லெண்ணமும், நன்னடத்தையும் கொண்டிருந்தால் மட்டுமே இறைவனுடன் இரண்டறக் கலக்க முடியும் என்பதற்கு உதாரண புராணங்களாக மேற்கண்டவை விளங்குகின்றன.




ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் :

தேவர்கள் ஆலகால விஷத்திற்கு அஞ்சி, கைலாய மலையை இங்கும் அங்கும் ஓடி, இறைவனைச் சரணடைந்து நற்கதியைப் பெற்ற வழிமுறைதான் - ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் என்று கூறப்படுகின்றது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடம் - ஸோம ஸூக்த பிரதக்ஷிண முறையைக் காட்டுகின்றது.

நிலையாக இருக்கும் சிவனை, நாம் வழிபடும் வலம் வரும் முறை, செயல் சக்தியாகச் செய்யும் போது, சக்தி தேவிக்குரிய திரிசூல வடிவம் வருவதைக் காணலாம். சிவனையும், சக்தியையும் ஒருங்கே வழிபட்ட பலன் கிடைக்கக் கூடிய அற்புதமான வழிபாட்டு முறை ஸோம ஸூக்த பிரதக்ஷிணம்.

பிரதோஷ வேளையில் ஸோம ஸூக்த பிரதக்ஷிணம் அளவற்ற பலனைத் தரும். ஸத்புத்ர சந்தானம் எனும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளமாகும்.

ஸோமஸூக்த பிரதக்ஷிணம் என்பதை மிக எளிய வகையில் செய்ய ஒரு உபாயம் உண்டு.

கோ

கோ

மேற்கண்ட குறியீடுகளை ஞாபகம் கொண்டு எளிதில் வலம் வரலாம்.

ந - நந்தி

ச - சண்டிகேஸ்வரர்

கோ - கோமுகி எனும் ஆலயக் கருவறையிலிருந்து அபிஷேகத்

தீர்த்தம் விழும் இடம்.


பிரதோஷ காலத்தில் நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் :

1. செல்வங்கள் பெருகும்.

2. கடன் தொல்லைகள் நீங்கும்,

3. நோய்கள் அகலும்

4. எதிரிகளால் ஏற்படும் அனைத்து தீய செயல்களும் செயலற்றுப் போகும்.

5. குழந்தைகளின் கல்வி மேம்படும்.

6. வேண்டிய வரம் கிட்டும்.

7. குழந்தைகள் எவ்விதமான கஷ்டமும் இன்றி உணவு எடுத்துக்கொள்ளும்.

8. நீடித்த ஆயுள் கிட்டும்.

9. சிவ சக்தியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.


ஒவ்வொரு நாளும் மாலை 4.30 - 6.00 நேரம் நித்திய பிரதோஷம் எனவும்,

ஒவ்வொரு அமாவசைக்கு முன்னரும், பெளர்ணமிக்கு முன்னரும் வரும் திரயோதசி திதி பட்ச பிரதோஷம் எனவும்,

சனிக் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது சனி மஹா பிரதோஷம் எனவும்,

திங்கட் கிழமையில், திரயோதசி சேர்ந்தால் - அது ஸோம பிரதோஷம் எனவும் போற்றப்பட்டு, சிறப்பான வகையில் வழிபாடு செய்யப்படும்.


நந்தியம்பெருமானுக்கேயுரிய சில சிறப்பு தலங்கள் :

நந்தி கொம்பு ஒடிந்த ஸ்தலம் - திருவெண்பாக்கம்

ஈசனோடு நந்தி இணைந்த உருவ ஸ்தலம் - திருக்கூடலையாத்தூர், பவானி

நந்தி விலகிய ஸ்தலம் - திருப்புங்கூர், பட்டீஸ்வரம், திருப்பூவனம், திருப்பூந்துருத்தி

நந்தி நின்ற ஸ்தலம் - திருமால்பேரு

நந்தி திருமண ஸ்தலம் - திருமழபாடி

நந்தி பிரதோஷ ஸ்தலம் - திருஅரிசிலி

நந்தி சிவனைப் பார்க்க இல்லாமல், திரும்பியவாறு கோபுரம் நோக்கிய ஸ்தலம் - திருவோத்தூர், திருமுல்லைவாயில், பெண்ணாடம் மற்றும் சில தலங்கள்.

பிரதோஷ காலத்தில், பூஜைகள் நடைபெறும் சமயத்தில், பன்னிரு திருமுறைகளில் உள்ள, அமிர்தம் கடைதல் தொடர்பான, பதிகங்களை படித்தலும் கேட்டலும் பற்பல பலன்களை வாரி வழங்கக்கூடியது. குறிப்பாக, சிவபுராணத்தினை (நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க ..) வாசிப்பதும், கேட்பதும் நற்பலன்களை அளிக்கக் கூடியது.

பிரதோஷ காலத்தில் பாராயணம் செய்ய பிரதோஷ ஸ்தோத்திரம் மற்றும் பிரதோஷ அஷ்டகம் எனும் மிக அரிய - மிகப் பழமையான நூலாகிய ஸ்காந்த புராணத்திலிருந்து எடுக்கப்பட்ட - சிறப்பு வாய்ந்த இரு ஸ்லோகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கீழ்க்கண்ட ஸ்லோகங்கள், பிரதோஷ காலத்தில் படிக்க அல்லது கேட்கப்பெறுவது, மேலே கூறியுள்ள அனைத்து பலன்களையும் வாரி வழங்க வல்லது.

பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானை வணங்கி நலங்களை நாளும் பெறுவோம் !

******

ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்திரம்

ஸ்ரீ கணேசாய நம:

ஜய தேவ ஜகன்னாத ஜய சங்கர சாச்வத |

ஜய ஸர்வ ஸுராத்யக்ஷ ஜய ஸர்வ ஸுரார்ச்சித ||

ஜய ஸர்வ குணாதீத ஜய ஸர்வ வரப்ரத |

ஜய நித்ய நிராதார ஜய விச்வம்பராக்ய ||

ஜய விச்வ ஏக வந்த்யேச ஜய நாகேந்த்ர பூஷண |

ஜய கெளரிபதே சம்போ ஜய சந்த்ர அர்த்த சேகர ||

ஜய கோட்யர்க ஸங்காச ஜய ஆனந்த குணாச்ரய |

ஜய பத்ர விரூபாக்ஷ ஜயாசிந்த்ய நிரஞ்சன ||

ஜய நாத க்ருபாஸிந்தோ ஜய பக்தார்த்தி பஞ்சன |

ஜய துஸ்தர ஸம்ஸார ஸாகர உத்தாரண ப்ரபோ ||

ப்ரஸீத மே மஹாதேவ ஸம்ஸாரார்தஸ்ய ஸ்வித்யத: |

ஸர்வ பாப க்ஷயம் க்ருத்வா ரக்ஷ மாம் பரமேஸ்வர ||

மஹா தாரித்ர்யமக்நஸ்ய மஹாபாப ஹதஸ்ய ச |

மஹா சோக நிவிஷ்டஸ்ய மஹா ரோகாதுரஸ்ய ச ||

ருணபாரபரிதஸ்ய தஹ்ய மாநஸ்ய கர்மபி : |

க்ரஹை: ப்ரபீஜமாநஸ்ய ப்ரஸீத மம சங்கர ||

தரித்ர: ப்ரார்த்தயேத்தவம் ப்ரதோஷே கிரிஜாபதிம் |

அர்த்தாடோ வாத ராஜா வா ப்ரார்த்தயேத்தேவம் ஈச்வரம் ||

தீர்க்கமாயு: ஸதாரோக்யம் கோசவ்ருத்திர் பலோன்னதி : |

மமாஸ்து நித்யம் ஆனந்த: ப்ரஸாதாத்தவ சங்கரம் ||

சத்ரவ: ஸம்க்ஷயம் யாந்து ப்ரஸீதந்து மம ப்ரஜாபத : |

துர்பிக்ஷமரி ஸந்தாபா: சமம் யாந்து மஹீதலே ||

ஸர்வ ஸஸ்ய ஸம்ருத்திஸ்ச பூயாத்ஸுகமயா திச: |

ஏவம் ஆராதயேத்தவம் பூஜாந்தே கிரிஜாபதிம் ||

ப்ராஹ்மணான் போஜயேத் பஸ்சாத் தக்ஷிணாபிஸ்ச பூஜயேத் |

ஸர்வ பாப க்ஷயகரி ஸர்வ ரோக நிவாரணி ||

சிவபூஜா மயாக்யாதா ஸர்வாபீஷ்ட பலப்ரதா ||

********************************************

ஸ்ரீ பிரதோஷ ஸ்தோத்ர அஷ்டகம்

ஸ்ரீ கணேசாய நம: |

ஸத்யம் ப்3ரவீமி பரலோக ஹிதம் ப்3ரவீமி

ஸாரம் ப்3ரவீம் உபநிஷத் த்4ருத3யம் ப்ரவீமி |

ஸம்ஸார முல்ப3ணம ஸாரமவாப்1ய ஜந்தோ:

ஸாரோSயம் ஈச்வர பதாம் ப்ருஹஸ்ய ஸேவா || 1 ||

யே நார்ச்சயந்தி கிரீசம் ஸமயே ப்ரதோஷே

யே நார்ச்சிதம் சிவமபி1 ப்ரணமந்தி சா1ன்யே |

ஏதத்கதா2ம் ச்ருதிபுடைர்ந பிப3ந்தி மூடா4ஸ்தே1

ஜன்மஜன்மஸ¤ ப4வந்தி நரா தரித்ரா : || 2 ||

யே வை ப்ரதோஷ ஸமயே பரமேஸ்வரஸ்ய

கர்விந்த்ய நந்ய மனஸோSங்கி4ரி ஸரோஜ பூஜாம் |

நித்யம் ப்ரவிருத்த4 தனதான்ய கலத்ரபுத்ர ஸெளபாக்ய

ஸம்பத3தி4 காஸ்த இஹைவ லோகே || 3 ||

கைலாஸசைல புவனே த்ரி ஜகஜ்ஜனித்ரிம் கௌரீம்

நிவேச்ய கனகா சிதரத்ன பீடே |

ந்ருத்யம் விதா4துமபி4 வாஞ்ச2தி சூலபாணௌ

தேவா: ப்ரதோஷ ஸமயே நு பஜந்தி ஸர்வே || 4 ||

வாக்3தேவீ த்4ருத வல்லகீ சதமகோ2 வேணும் த3த4த் பத்மஜ

ஸ்தாலோன்னித்3 கரோ ரமா ப4கவதீ கேய ப்ரயோகாந்விதா |

விஷ்ணு: ஸாந்த்ர ம்ருத3ங்க வாத3நபடுர்தே3வா: ஸமந்தாத்ஸ்தி2தா :

ஸேவந்தே தமநு ப்ரதோஷ ஸமயே தேவம் ம்ருடா3நிபதிம் || 5 ||

கந்தர்வ யக்ஷ பதகோரக ஸித்த3 ஸாத்4ய வித்யாதரா ரவராப்ஸரஸாம் க3ணாஞ்ச |

யேsன்யே த்ரிலோக நிலயா ஸஹபூ4தவர்கா: ப்ராப்தே பரதோஷ ஸமயே ஹரபார்ச்வ ஸம்ஸ்தா2 : || 6 ||

அத: ப்ரதோஷே சிவ ஏக ஏவ பூஜ்யோsத2 நான்யே ஹரி பத்மஜாத்தா4: |

தஸ்மிந் மஹேசே விதி4நேஜ்யமாநே ஸர்வே பரஸீதந்தி ஸ¤ராதி4நாதா2: || 7 ||

ஏஷ தே தநய: பூர்வஜன்மநி ப்ராஹ்மணோத்தம: |

ப்ரதி க்ரஹைர்வயோ நிந்யே ந தாநாத்தை: ஸ¤கர்மபி : || 8 ||

அதோ தாரித்3ரய மாபந்ந: புத்ரஸ்தே த்3விஜபா4மிநி |

தத்தோஷ பரிஹாரார்த்தம் சரணாம் யாது சங்கரம் ||

|| இதி ஸ்ரீ ஸ்காந்தோக்தம் ப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம் ஸம்பூர்ணம் ||

- நி.த. நடராஜ தீக்ஷிதர்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் ஆலய டிரஸ்டி & பூஜை

செல் : 94434 79572

mail : yanthralaya@yahoo.co.in

yanthralaya@gmail.com

www.facebook.com/deekshidhar